Batch 14 சித்திரைக்கனி முதல் வகுப்பு ஆரம்பம்.
ஜோதிட வகுப்பு : “6 months Course” :
ஜோதிட வகுப்பு பற்றிய விபரங்கள் :
இந்த வகுப்பு ஏப்ரல் மாதம் [April-14] சித்திரை கனி அன்று ஆரம்பிக்க உள்ளது. அதற்கு முன் கட்டணம் செலுத்தி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
இந்த ஜோதிட வகுப்பு ஆறு மாதம் தொடர்ந்து நடைபெறும். ஆறு மாதங்கள் என்றால் மாதத்திற்கு நான்கு வகுப்புகள்.
( மாதந்தோறும் 4 ஞாயிற்றுக்கிழமை மட்டுமே)
இந்த நான்கு வகுப்புக்கும் சேர்த்து மாதம் ரூபாய் 2000 கட்டணம் செலுத்த வேண்டும்.
முதல் மாதத்திற்கான கட்ணத்தை செலுத்திக்கொண்டு எங்களது ஜோதிட குழுவில் கலந்து கொள்ளலாம்.
அங்கு தங்களுக்கு [அடிப்படை ] முதல் மாதத்திற்கான பிடிஎஃப் பைல் அனுப்பப்படும். மற்றும் ஜோதிட பயிற்சிகளும் அளிக்கப்படும். எனவே விரைவில் கலந்து கொள்ளவும். நன்றி🙏🏻🙏🏻💐
சேவைகளை தேர்ந்தெடுக்கவும்
பிரபஞ்ச சூட்சமம்
ஐம்புலன்களை ஆட்கொள்ளும் மனதை, அதிர்வுகளால் இயக்கும் பிரபஞ்சத்தின் கிரகங்கள் உருவாக்கும் நன்மை, தீமை மற்றும் அவற்றுக்கான உரிய தீர்வுகளை முன்கூட்டியே உணர்வதே ஜாதகச் சித்தாந்தமாகும். இது மனித வாழ்வின் திசையைத் தெளிவுபடுத்தி, சவால்களை சமாளிக்கும் வழிமுறைகளை அளித்து, நல்வாழ்விற்கான பாதையை வெளிக்காட்டுகிறது
திருமதி. கோட்டு மொழி சத்யா
(MA ASTRO, PhD)
உண்மையான ஜோதிடத்தின் மூல ஆழத்தை உணர்ந்து, பாரம்பரிய ஞானத்தையும் உளவியல் நுட்பங்களையும் இணைத்து, “உளவியல் ஜோதிட முறை” எனும் புதிய திசையை உருவாக்கியவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை வழிநடத்தும் சிறந்த கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். Know More
Learn Through Books
Learn Through Pendrives
Our Products
Peoples Feedback
Excellent Guru
I have been fortunate to learn and still learning Astrology from Mrs. Satya mam. Extremely grateful to the divine for bringing me under her fold. She is a very good guru, calm, patient and selfless and extremely proficient in her subject. Had the opportunity to attend her Money magic class and kadhal sadhurangam class- I try to follow her teachings in my day to day routine, very good motivator and her teachings are helping me in dealing with my day to day issues, in handling kids ,finances and also has brought a sense of calmness in me. She is a wonderful soul and being in touch with her is good for us.
Amazing
பிறவி குணத்தினை உலகமாக்கி அவ்வுலகம் வெவ்வேறுயென தெளிவை காட்டி மாறுப்பட்ட உலகத்தில் வசிப்பவர் ஈர்ப்பால் இணைந்து. முற்றிலும் மாறும் பட்ட உலகத்தவர் இணைந்து இரண்டு உலகங்களின் கலவை உலகத்தில் வாழவருகின்றவரின் அனுபவம் புதிதே !!! என்று சொல்லாமல் சொல்லிய . சக்திதாய்மைக்கு நன்றிகள் பல கோடி.
எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியது
வணக்கம்…
மேம் வகுப்பு மிகவும் சிறப்பு ஆண் பெண் உலகங்களின் அவர்கள் வாழ்ந்த விதத்தை மிகவும் ரசனையோடு சொன்னது சிறப்பு மற்றும் இதை அவர்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் புரிதலுக்கு இது எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியது அருமை மேம் நன்றிங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🙏
Mostly all Sathya's madam class Are amazing !!!
All Sathya’s madam class is amazing and way madam explain politely is always special …Once started class we don’t exit till class ends. That much importance and attention giving to eagerly learn from Madam…..Everyone will present till class ends that is speciality of Madam class…Hope we expect Madam give their Best and we are always there to learn lot…Thank you….
Explanations was so clear
Mam’s Class topic was so simple for me , the explanations was so clear and mentioning about Men’s world and Women’s world , their character , attitude. Reasoning on men & women was so logical and more satisfying. Personally what i felt more important was , taking the class with humour & smiling face. Thank you maam 💐💐
காதல் சதுரங்கம் வகுப்பு பற்றிய கருத்து
ஆண்கள் எதை விரும்புகிறார்கள், பெண்கள் எதை விரும்புகிறார்கள். இருவரின் கருத்து இதில் ஏன் முரண்படுகிறது, இருவரும் பிரச்சனைகளை தீர்க்க முடிவு எப்படி எடுக்கிறார்கள், கணவன் மனைவி எந்த விஷயத்தில் எதிர்பார்ப்புகள் தவிர்க்க வேண்டும், பருவ வயதில் குழந்தை களின் உடை, மாமியார் மருமகள் நாத்தனார் எண்ணவோட்டம் என்ன, மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள் ஒரு கோர்வையாக விளக்கம் கிடைத்தது. கணவன் மனைவி என்ற உறவிற்குள் வேறு யாரும் நுழைய இடம் கொடுக்க கூடாது.. அவர்கள் அன்பு பாசத்தை சரியாக பரிமாறி கொண்டால் போதுமானது.. இல்லறம் சிறக்கும்…
சரியான புரிதலுடன் வாழ்க்கையை கொண்டு செல்லும் போது (கணவன் மனைவி) அவர்களின் குழந்தைகளும் நல் வழியில் செல்லும். அதிகமான எதிர்பார்ப்பு இல்லாமல் குடும்பத்தை நல் முறையில் கொண்டு போகாலம் என்பதே எனது புரிதல்… இன்னும் மேம்பட்ட தகவல்களுக்கு காத்திருக்கிறோம்.. ஒவ்வொரு தனி நபர்களுக்கும் வாழ்கை பற்றின புரிதல் அவசியம்..
நன்றி மேம்…🙏
வாழ்க வளமுடன் 💐
உங்கள் பணி சிறக்கட்டும் 💐
"காதல் சதுரங்கம்" என்ற உங்கள் வகுப்பு எனக்குப் பாடமாக இல்லை - அது என் வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான்
நீங்கள் சொன்ன ஒவ்வொரு உண்மையும் என் உள்ளத்தின் சத்தமாக ஒலித்தது. காதல், நம்பிக்கை, துரோகம் , மெளனம்,வலி, மன்னிப்பு – எல்லாம் என் வாழ்வின் கதைகளாக உங்கள் வார்த்தைகளில் மீண்டும உயிர் பெற்றது . சில நேரஙகளில் நான் அமைதியாகி விட்டேன்.ஏனென்றால் அந்த அனுபவங்கள் என் இதயத்தில் மறு ஒலியாக வந்தன.”REVENGE” என்ற உணர்வை தாங்கி வந்திருந்தேன்; ஆனால், உங்கள் வகுப்பு அதை “மாற்றத்தின் வழி”என்று என்று எனக்கு காட்டியது. அந்த ஒரு மெளன நேரத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால் “காதல்” ஒரு “சதுரங்கம்” போல இருந்தாலும், அதன் உண்மையான வெற்றி “அன்பை விடுவிப்பதில்” தான் இருக்கிறது. என் வலியும், என் விழிப்பும் அதில் இணைந்து விட்டது.
நன்றி mam, உங்கள் ஒளி என் உள்ளம் வரை வந்தது.
காதல் சதுரங்கம் வருப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
குழந்தைகள் வளர்ப்புல இருந்து என்ன என்ன தவருகள் பெரும்பாலும் நாம செய்ரோம்னு ஆரமிச்சி, teanage’ல் குழந்தைகளுக்கு என்ன சொல்லி குடுக்கனும், எதுல கவனிக்கனும் இது எல்லாமே இப்பொ உள்ள பெற்றோர்களுக்கு அவசியம் தேவைபடும் விஷ்யமும், எங்கயும் சுலபமா கத்துக்க முடியாத விஷியமுமா இருந்தது. அதை ரொம்ப சுலபமா சொல்லி புரிய வெச்சிங்க. அதை தாண்டி, ஒரு ஆண், பெண் உடைய இயல்பான பன்புகளையும், அவரவர் எதிர்பார்ப்புகளையும் திருமணம் செய்து கொள்ளும் அனைவரும் கத்துக்கரது அவசியம். அது இந்த வகுப்புல சுலபமா, இப்பொ இருக்க சமுதாயத்துக்கு ஏற்றது போல அப்டேடோட குடுத்திங்க. நன்றி. இந்த நுனுக்கங்கள் புரியாம திருமண வாழ்க்கைல சொதப்பியவர்கள் எப்படி சரி செய்துக்கனும், சாமார்த்தியமான நல்லவர்களாக எப்படி இருக்கனும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நிறைவான வாழ்க்கைய அமச்சிக்கரதுக்கும் ஒரு வழிகாட்டியாக இந்த வகுப்பு இருந்தது. உங்களுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டதும், மனதுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. Motivation ஆக இருந்தது.
நன்றி சத்தியா மேம் & குணா சார். அதோடு பெரியவர்களின், அன்பான தம்பதியர்களின் ஆசியும் கிடைத்தது. நீங்க பரிந்துரை செய்த புத்தகங்கள் மேலும் உதவியாக இருந்தது. அனைவருக்கும் மிக்க நன்றி.🙏